Saturday, November 28, 2009

ரகசிய குறியீட்டு எண் இல்லாத 2 1/2 கோடி செல்போன் இணைப்பு துண்டிப்பு



இந்தியா முழுவதும் உள்ள ரகசிய குறியீட்டு எண் இல்லாத 2 1/2 கோடி செல்போன் இணைப்புகள் வரும் திங்கள் கிழமை முதல் துண்டிக்கப்படுகின்றன.

செல்போன்', வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று ஆகிவிட்டது. செல்போன் பயன்பாட்டில் இந்தியா முன்னணியில் உள்ளது. செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செல்போன் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவி உள்ளன. மேலும் கொரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் செல்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை ஆகின்றன.


செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்போன் குறியீட்டு எண்) என்ற ரகசிய குறியீட்டு எண் உள்ளது. இந்த எண் 15 இலக்கங்களை கொண்டது ஆகும். ஒவ்வொரு செல்போனுக்கும் ஒவ்வொரு ஐ.எம்.இ.ஐ. குறியீட்டு எண் இருக்கும்.


ஒரு செல்போன் எந்த இடத்தில் இருந்து பேசப்படுகிறது என்பதை இந்த எண்ணின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். மேலும் செல்போன் தொலைந்து விட்டால், உரிமையாளர் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் இந்த எண் தான் உதவுகிறது.


ஆனால் கொரியா, சீனாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வந்து விற்கப்படும் ஏராளமான செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. என்ற சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இருப்பது இல்லை. இந்தியா முழுவதும், ரகசிய குறியீட்டு எண் இல்லாத சுமார் 2 1/2 கோடி செல்போன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.


இந்த குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த வகை செல்போன்களில் இருந்து பேசும் போது எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இது தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாக போய் விடுகிறது.


எனவே, சமீப காலமாக தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாலும், நாட்டின் பாதுகாப்பு கருதியும் சர்வதேச குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் செயல்பாட்டை முடக்க மத்திய அரசு முடிவு செய்தது.


இதைத்தொடர்ந்து, அத்தகைய செல்போன் வைத்திருப்பவர்கள் அதை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை `கெடு' விதித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.


அந்த `கெடு' முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. எனவே, திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல், சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.


எந்த செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லையோ அல்லது எல்லா குறியீட்டு எண்களும் பூஜ்ஜியமாக இருக்கிறதோ அந்த செல்போனில் இருந்து செய்யப்படும் அழைப்புகள் மற்றும் பெறப்படும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறி இருக்கிறது.


இதுகுறித்து, இந்திய செல்போன் சங்கத்தின் தேசிய தலைவர் பங்கஜ் மகிந்திரூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


இந்திய தொலைத்தொடர்பு துறை மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சராசரியாக ஒரு மாதத்தில் புதிதாக 1 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. அதே எண்ணிக்கையில் புதிய செல்போன்களும் உபயோகத்துக்கு வருகின்றன. இந்தியாவில் உபயோகத்தில் உள்ள 50 கோடி செல்போன்களில் கணிசமானவை ஐ.எம்.இ.ஐ. என்ற சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் ஆகும்.


இத்தகைய ரகசிய குறியீட்டு எண் இல்லாத சுமார் 2 1/2 கோடி செல்போன்கள் உபயோகத்தில் இருப்பதாக கண்டு அறியப்பட்டு உள்ளது. இது உபயோகத்தில் உள்ள மொத்த செல்போன்களில் 5 சதவீதம் ஆகும். இந்த செல்போன்கள் விற்பனையால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய செல்போன்களை விற்பனை செய்ய மத்திய தொழில் துறை மற்றும் வர்த்தக அமைச்சகம் ஏற்கனவே தடை விதித்து இருக்கிறது. எனவே,


ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும். ரகசிய குறியீட்டு எண் இல்லாத சட்ட விரோதமான செல்போன்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவற்றின் இணைப்பை 30-ந் தேதி முதல் துண்டிக்குமாறு தொலைத்தொடர்பு துறை பிறப்பித்துள்ள உத்தரவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.


செல்போன் உபயோகிப்பாளர்கள், 57886 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி தங்கள் செல்போனின் ரகசிய குறியீட்டு எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Thursday, November 19, 2009

குழந்தையை காப்பாற்ற காவல் நிலையத்தில் தாய் குரங்கு வழக்கு



தந்தை குரங்கிடம் இருந்து தனது குழந்தையை காப்பாற்ற தாய் குரங்கு ஒரிசா காவல்நிலையத்தில் மனு கொடுத்துள்ளது. ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஆஸ்ட ராஞ்ச் நகரில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவற்றில் ஒரு பகுதி குரங்கு கூட்டம் மார்க்கெட் பகுதியில் வசிக்கின்றன. இதில் ஒரு பெண் குரங்கு 3 மாத குட்டியுடன் இருக்கிறது. இந்த குட்டியை கொல்ல ஆண் குரங்கு ஒன்று தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த ஆண் குரங்கு குட்டியின் தந்தையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

ஆண் குரங்கு இந்த குட்டியை கொன்று விடாமல் தடுக்க தாய் குரங்கு எப்போதும் தன் குட்டியை தன் மடியிலேயே வைத்துள்ளது. அதை சுற்றி மற்ற குரங்குகள் பாதுகாப்பாக நிற்கின்றன. இருந்தும் ஆண் குரங்கு குட்டியை கொல்லும் நோக்கத்துடன் அடிக்கடி தாக்கி வருகிறது. அதை மற்ற குரங்குகள் சண்டையிட்டு விரட்டி வருகின்றன. இதை பார்த்த ஊர் பொதுமக்களும் ஆண் குரங்கை விரட்டி அடித்து வருகின்றனர். ஆனாலும் ஆண் குரங்கு குட்டி குரங்கை குறிவைத்து சுற்றி சுற்றி வருகிறது.

இதனால் பொதுமக்கள் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். தாய் குரங்கு நேரடியாக புகார் கொடுப்பது போல ஒரியா மொழியில் மனு ஒன்றை தயாரித்தனர். அதன் கீழ் கைரேகைக்கு பதில் குரங்கின் வால்பகுதியை மையில் நனைத்து பதிவு செய்தனர்.

அதை போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். தாய் குரங்குக்கு சிமியன் என்றும், ஆண் குரங்குக்கு ராஜா என்றும், குட்டி குரங்குக்கு குணா என்றும் மக்கள் பெயரிட்டு இருந்தனர்.

சிமியன் கொடுத்துள்ள புகாரில், என் குழந்தையை எனது கணவர் ராஜா கொல்ல முயற்சித்து வருகிறார். அவரிடம் இருந்து என் குழந்தையை பாதுகாக்க வேண்டும். கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் தந்தை குரங்கு ராஜா மீது இந்தியன் பியனல் கோடு 307 (கொலை முயற்சி), 363 (கடத்தல்), 366 (அடிமைப்படுத்த கடத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆனால் போலீசார் என்ன செய்துவிட முடியும். குட்டியை காப்பாற்றும் விதத்தில் பொதுமக்களே தடியுடன் ஆண் குரங்கை கண்காணித்து வருகின்றனர்.

Tuesday, November 10, 2009

கைகளுக்குள் வரும் இன்டர்நெட்



உலக அளவில் இணைக்கப்பட்ட பல கம்ப்யூட்டர்களை நாம் இன்டர்நெட் என அழைக்கிறோம். ஆனால் இமைப்பொழுதில் எப்படி எங்கோ ஒரு மூலையில் உள்ள கம்ப்யூட்டர் சர்வரில் உள்ள தகவல்கள் நம் கம்ப்யூட்டரை வந்தடைகின்றன? இன்டர்நெட்டை முதலில் பயன்படுத்தும் அனைவரின் மனதிலும் இந்த சந்தேகம், வியப்பு எழுவது இயற்கையே. ஒரு சிலர் மேலும் துருவி ஆய்வு செய்து, நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்கின்றனர். சிலரோ அதுதான் இன்டர்நெட் என்று கிடைக்கும் தகவல்களைப் பற்றிய சுவராஸ்யத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். இங்கு அந்த இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம். நம் கைகளுக்குள் உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தகவல்கள், படங்கள், வீடியோக்கள் எப்படி நம் இல்லத்தில் ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டருக்குள் வருகிறது என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரை இயக்கி, இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து, பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் – இன்டர் நெட்எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், சபாரி, குரோம், – என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை "கிளையண்ட்" என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்" என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியேஅனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்" என்னும் அதி வேக வழியில் செல்கிறது. இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்" என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.

நாம் ஓர் இணையதளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது. இதற்கு புரோட்டோகால் (Protocol) என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட் டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர்கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை–பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி – ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.

இன்டர்நெட்டில் இணைக்கப் படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 விலிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது, உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஓர் ஐ.எஸ்.பி., ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால், அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்ட ரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol)என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின்ச் செயல்பாடு. ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.

அதென்ன தகவல் பாக்கெட்?

இன்டர்நெட் என்பது "பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்' என அழைக்கப் படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் "சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்' என அழைக்கப்படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன் படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடுத்துககாட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால் சிறு சிறு பலகைகளை, மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை அமைத்திருப்பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன.

ஒவ்வொரு ஹெடரிலும் செக்சம் (Checksum) எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது. இப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது? நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர், டொமைன் நேம் சர்வர் (Domain Name Server DNS) என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன.


Thursday, October 29, 2009

சிறந்த தரத்தையுடைய முதல் பத்து நகரங்களின் பட்டியலில் சுவிஸின் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன



சிறந்த தரத்தையுடைய நகரங்களின் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் மிக முக்கியமான மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சூரிச், ஜெனீவா மற்றும் பேர்ன் ஆகிய நகரங்கள் உலகின் மிகச் சிறந்த தரத்தையுடைய முதல் பத்து நகரங்களில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக இரண்டாவது இடத்தை சூரிச் நகரமும், மூன்றாம் இடத்தை ஜெனீவா நகரமும், ஒன்பதாம் இடத்தை பேர்ன் நகரமும் பிடித்துள்ளன.

வரலாற்றுச் சிறப்பு, அமைவிடம், மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அபிவிருத்திக் கொள்கைகள் என்பனவற்றின் காரணமாக சுவிஸ் நகரங்கள் சிறந்த தரத்தைக் கொண்டமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லண்டனில் உள்ள மெர்சியர் ஆராச்சி நிலையத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு மதிப்பீட்டின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

உலகின் 420 நகரங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக பல வருடங்களாக சூரிச், ஜெனீவா மற்றும் பேர்ன் ஆகிய நகரங்கள் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, October 21, 2009

தரிசனம்


தினமும் அவள் வீட்டை
கடக்கும்போது தானாகவே
என் கால்கள் வேகத்தை
குறைத்துக்கொள்ளும்
அவள் வீட்டு வாசலை
பார்த்த படியே நடந்து
செல்வேன் என்
தேவதையின் தரிசனத்துக்காக

எத்தனையோ முறை
முயற்சித்தும் என்
காதுகளுக்கு மட்டும் அவள்
காந்தக்குரலை
கேட்கும் பாக்கியம்
கிட்டவே இல்லை

திடீரென அவள் வீடு
பூட்டிக்கிடந்தது ஒரு நாள்
இரண்டு, மூன்று, பதினெட்டு
மாதங்கள் அவள் தரிசனம்
இன்றி ஏங்கினேன்

என் வீட்டு வாடகை
முடிந்து வேறு வீட்டுக்கு
மாறி விட்டேன் முதல் நாளே
மொட்டை மாடியில்
நான்..........
கால்கள் நழுவி அந்தரத்தில்
நிற்பதுபோல் ஓர் உணர்வு
ஓ நான் காண்பது கனவா
எதிர்வீட்டு மாடியில்
என் தேவதை

இப்போதேல்லாம் நான்
நினைத்தது போலவே
இரண்டு முறையாவது
எனக்கு தரிசனம் தந்து
விடுவாள் என் தேவதை
தன் இரண்டு மாத
கைக்குழந்தையோடு...

Wednesday, October 14, 2009

எப்போது புரியும்

என் கவிதைகளை மட்டுமே
வாசித்து பழகிய நீ என்
கண்களை கவனித்திருந்தால்
உன்னோடு நான் வாழ்ந்து
கொண்டிருப்பது எப்போதோ
உனக்கு புரிந்திருக்கும்

பேருந்தில் ஆசையாய் உன்னருகில்
அமர்வது கூட நாம் சுவாசித்த
காற்றாவது ஒன்று சேரத்தான்

என் கையால் முற்றுப்புள்ளி
வைக்க வேண்டிய கவிதை நீ
ஏன் இன்னொரு கவிஞ்சனை
தேடிக்கொண்டிருக்கிறாய்.

* * * * * *

Monday, October 12, 2009

என் பள்ளிப்பருவ ஹீரோ

1982- 2000 என் வாழ்க்கையில் மறக்க முடியாத என் பள்ளிப்பருவம் அதிலும் என் எட்டாம் வகுப்பு வரை நாங்கள் படித்தது லக்கம் தனியார் தோட்டத்தில் ஒரு சிறிய பள்ளியில், அப்போது நான் கேள்வி பட்டிருக்கிறேன் அது வெள்ளையர்கள் காலத்தில் குதிரைகள் அடைத்து வைப்பதற்காக கட்டப்பட்டதாம் என் எட்டாம் வகுப்புவரை அங்குதான் படித்தேன்.

எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். வழியில் மழைக்கு ஒதுங்குவதட்கும் ஓர் இடம் கிடையாது, இப்போது அங்கு அந்த பள்ளி இல்லை வேறு ஒரு இடத்தில் மகா வித்தியலயமாகிவிட்டது.
ஆனாலும் நான் ஊருக்கு போனால் எப்படியாவது அங்கு போக மறப்பதில்லை காரணம் என் ஹீரோ அங்குதான் இருக்கிறார், ஆமாங்க.



இவர்தான் அந்த பள்ளிக்கூடத்திலிருந்து 300 மீட்டர் தூரத்தில் ஒரு சிறிய ஆற்றங்கரை தான் அய்யாவின் இருப்பிடம் காலையில் வரும்போதும் வீட்டுக்கு போகும்போதும் இவரை கடந்துதான் போகவேண்டும். பரீட்சை வந்தால் இவருக்கு ஒரே குஷிதான் சூடம், பத்தி,பால், பழம், தேங்காய் என அமர்களப்படுத்தி விடுவோம்.

மழை நேரத்தில் இவரை கடந்து போகும்போது வந்தால் தப்பித்தோம். ஆனால் மழை நின்றால்தான் இவருக்கு நிம்மதி கத்தி கூச்சல் போட்டு மனதுக்குள் அழுதுதே விடுவார். அப்படி பட்ட இவரை சத்தியமாய் அந்த ஊரை விட்டு வந்ததும் கொஞ்ச நாள் மறந்தே போனேன். ஆனால் விடுவாரா

அடிக்கடி அந்த பாதை தெருவோரம் உள்ள பாறைகள் என் கனவில் வரத்தொடங்கியது உண்மையா அவர் வரவே இல்லை. எதோ என் மனதுக்கு தோன்ற அடுத்த வாரமே புறப்பட்டு போனேன். அன்றிலிருந்து ஒவ்வொரு முறையும் ஊருக்கு போனால் அங்கு போகாமல் வருவதே இல்லை. அந்த ஊர் காரர்கள் எல்லோருமே சொல்வார்கள் அந்த ஊரில் படித்த மாணவர்களிலேயே நான் மட்டும்தான் இன்னும் மறக்காமல் இங்கு வந்து போகிறேன் என்று. அதான் இந்த முறை கையோடு கொண்டுபோன என் கேமராவில் அய்யாவை அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்.







Saturday, October 10, 2009



நாசா அனுப்பிய LCROSS (Lunar Crater Observation and Sensing Satellite) செயற்கைக் கோளுடன் இணைத்து அனுப்பப்பட்ட ரொக்கெட்டுக்கள் நிலவின் தளத்தில் மோதியுள்ளன.

மொத்தம் 2 ரொக்கெட்டுக்கள் மோத விடப்பட்டன. இரண்டுமே வெற்றிகரமாக நிலவின் தளத்தில் மோதி நின்றதாக நாசா தெரிவித்துள்ளது.

முதலில் 'சென்டார்' என்ற ரொக்கெட்டை மோத விட்டனர். நிலவின் தென் முனையில் இந்த ரொக்கெட் மோத விடப்பட்டது.

2000 கிலோ எடை கொண்ட அந்த ரொக்கெட், மணிக்கு 900 கிலோ மீட்டர் வேகத்தில் அசுர வேகத்தில் பாய்ந்து சென்று மோதியது.

இதையடுத்து 'ஷெபர்டிங்' என்ற 2ஆவது ரொக்கெட் மோத விடப்பட்டது. முதல் ரொக்கெட் மோதிய நான்கு நிமிடங்களில் 2ஆவது ரொக்கெட் மோத விடப்பட்டது. அதே கோணத்தில் இந்த ரொக்கெட்டும் விடப்பட்டது.

நிலவின் தளத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்கான ஆய்வுக்காக 'எல்கிராஸ்' அனுப்பப்பட்டுள்ளது. சந்திரயான்-1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடிக்க உதவியதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் கவனம் நிலவின் மீது திரும்பியுள்ளது. 'எல்கிராஸ்' அனுப்பும் திட்டத்தின் செலவு 100 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

2020ஆவது ஆண்டில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பான முக்கியத் தகவல்களுக்கும் இந்த 'எல்கிராஸ்' திட்டம் உதவும்.

'எல்கிராஸ்' செயற்கைக் கோள், ஜூன் 18ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

ஷெபர்டிங் ரொக்கெட்டில், அறிவியல் சார்ந்த அதி நவீன சாதனங்களும், நவீன கெமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு ரொக்கெட்டுக்கள் மூலமும் நாசாவுக்கு பல்வேறு தகவல்கள் அனுப்பப்படவுள்ளன. அதை ஆய்வு செய்து நிலவின் தளத்தில் தண்ணீர் இருப்பது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது நாசா.

Friday, October 9, 2009

கிளி வாங்கப்போய்...

எப்போதோ படித்து சிரித்தது.


அம்மா தன் குழந்தைகளுக்கு ஒரு கிளி வாங்கித் தர நினைச்சா. கிளி விக்கறவனைப் பார்த்துக் கேட்டா,"ஏம்ப்பா இந்தக் கிளி சத்தம் போடுமா?"

"போடாதும்மா. சாதுவான கிளி"

"மரியாதை இல்லாம பேசுமா?"

"பேசாதும்மா. நல்ல கிளி. அதோட இடது கால்ல கட்டியிருக்கற நூலைப் புடிச்சு லேசா இழுத்தீங்கன்னா, ஒரு குறள் சொல்லும். வலது கால்ல கட்டியிருக்கற நூலை இழுத்தீங்கன்னா, ஒரு ஆத்திச்சூடி சொல்லும்"

"ரெண்டையும் புடிச்சு இழுத்தா?"

"கீழ வுழுந்துருவேண்டி, நாசமாப்போன பன்னாடை!"ன்னு கத்துச்சு கிளி.

Thursday, October 1, 2009

நான் எழுதிய கவிதைகளை
நீ வீசி எரிந்தும் ......
நான் மறுபடியும்
மறுபடியும் ஏன் உனக்கு
தருகிறேன் தெரியுமா
காற்றாவது வாசித்து
உன் காதில் சொல்லும்
என்பதால்.

*****

Sunday, August 30, 2009

வானில் அம்மன் தோன்றும் அரிய புகைப்படம்




கொழும்பிலிருந்து முதற்தடவையாக மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்ற பக்தை ஒருவரின் கமராவில் சிக்கியது தான் இந்தப் படம். புகைப்படத்தை பாருங்கள்.


பரந்த இந்த நிலப்பரப்பில் நீல நிறமாக காணப்படும் வானில் ஏதாவது உங்களுக்குத் தென்படுகிறதா...? உங்களிடம் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா...? அப்படியானால் கூர்ந்து அந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயம் அந்தப் படத்தில் ஒரு உருவம் தென்படுவதை காண்பீர்கள். நிச்சயமாக அது புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தான் என்கிறார் செல்வி லாவண்யா பகீரதன்.


இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவி. வெள்ளவத்தையைச் சேர்ந்தவர். இந்தப் புகைப்படம் குறித்தும் அதில் தென்படும் அந்த அம்மன் உருவம் குறித்தும் லாவண்யா மெய்சிலிர்க்க எம்மிடம் பின்வருமாறு கூறினார்.


கொழும்பைச் சேர்ந்த நாங்கள் முதற்தடவையாக மட்டக்களப்புக்கு போயிருந்தோம். அந்தப் பயணத்தின் போது மிக மிக சக்தியும் அதன் மூலம் பிரசித்தியும் பெற்ற புன்னை சோலை அம்மன் கோயிலுக்கு போக விரும்பினோம். இந்த ஆலயத்தில் நிறைய அற்புதங்கள் நடந்துள்ளன.


நாங்கள் போன போது ஆலயம் மூடப்பட்டிருந்தது. ஓரிருவர் மட்டும் வெளியே நின்று வணங்கிக் கொண்டிருந்தனர். இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இரண்டு கதவுகள் உண்டு. ஒரு கதவு பௌர்ணமி தினத்தில் மட்டுமே திறக்கப்படும். மற்றைய கதவு வருடத்தில் ஒரு முறை மட்டுமே திறக்கப்படும்.


பௌர்ணமி நாட்களில் மட்டும் திறக்கப்படும் கதவின் பின்னே பெரிய அம்மன் சிலை ஒன்று உள்ளதாம். வருடத்திற்கு ஒருமுறை திறக்கும் கதவின் பின்னே மூன்று அம்மன் சிலைகள் உண்டாம். பெரும்பாலும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அம்மன் உரு வந்து ஆடுவதுண்டாம். பிள்ளை வரம் இல்லாதவர்கள், திருமணம் கை கூடாதவர்கள் எல்லாம் இங்கு வந்து நேர்த்தி வைத்தால் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறுமாம். இவை எல்லாம் இங்குள்ள மக்களிடம் இருந்து தெரிந்து கொண்ட விடயங்கள்.


மூலஸ்தானக் கதவு மூடப்பட்டிருந்ததால் ஆலயத்திற்கு வெளியே நின்று அம்மனை தரிசித்து விட்டு மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பயணித்தோம். அந்தச் சமயம் அமிர்தகழிக்கும் புன்னைச் சோலைக்கும் இடையில் ஒரு பெரிய வெற்று நிலப்பரப்பு காணப்பட்டது. வானம் முகில்கலின்றி மிக ரம்மியமாக காணப்பட்டது.


அந்த காட்சி என் மனதை மிகவும் கவர்ந்ததால் உடனே என் கமராவைக் கொண்டு அந்த இயற்கை சூழலை கிளிக் செய்தேன். இப்படி நிறைய புகைப்படங்களை எடுத்தேன். கொழும்பு திரும்பியதும் அந்தப் படங்களை டெவலப் பண்ணி எடுத்து பார்த்த போது ஆச்சரியப்பட்டு போனோம். அதிசயத்தில் பரவசப்பட்டு போனேன்.


எடுத்த படங்களில் வானில் அம்மன் உருவம் ஒன்று தென்பட்டது. இது நிச்சயம் புன்னைச்சோலை அம்மன் தான் என்று எங்கள் உள்மனம் சொல்கிறது. அதுதான் உண்மையும் கூட. கொழும்பிலிருந்து சென்று அம்மனை தரிசிக்க முடியாது போன எங்களுக்கு ஏமாற்றம் ஏற்படக் கூடாது என்று நினைத்த அம்மனின் அருள் தரிசனம் தான் அது.

காலம் எப்படி மாறிப்போச்சி


1947


2009


Monday, August 24, 2009

டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.

இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.

பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.

எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

Friday, August 21, 2009


கைப்பேசியும் காதலியும்
இல்லாத வாழ்க்கை
வெறுமையாய் போகும்.......
இரண்டும் இருப்பவன்
வாழ்க்கை
வெறுத்துப்போகும் .

Saturday, August 8, 2009



இலங்கேசன் காலத்தில்
நீ பிறந்திருந்தால்
எனக்குத்தான் எதிரியாகி
இருப்பான் சீதைக்கு
பதிலாய் உன்னை
சிறையெடுத்து.
*****

Wednesday, July 22, 2009

சொந்த மகளைக் பாலியல்வல்லுறவிற்குட்படுத்தியத்திய தந்தைக்கு 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை:வவுனியா மேல் நீதிமன்றம்

பதினாறு வயது நிரம்பாத தனது சொந்த மகளை
பாலியல்வல்லுறவிற்குட்படுத்தியத்திய குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினராக இருந்த இவருக்கு நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்துள்ளது.வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் முன்னிலையில் சட்டமா அதிபரினால் பதினாறு வயதுக்குக் குறைந்த தனது மகள் மீதான பாலியல்வல்லுறவு தொடர்பில் 3 குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


வழக்கு விசாரணையின்போது சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி தனது கணவன் சொந்த மகளைக் பாலியல் வல்லுறவு கொண்டதை நேரில் கண்டு பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து இந்த கற்பழிப்பு வழக்கு எதிரியாகிய செல்வராஜா சற்குணலிங்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது. தனது தந்தை தன்னை பல தடவைகள் தன்மீது பாலியல் குற்றம் புரிந்ததாகத் தெரிவித்தார். எதிரி மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளும் பாலியல்வல்லுறவு தொடர்பானதாகும்.


குற்றச் சம்பவம் நடைபெற்றதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வவுனியா வைத்திய அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பிறப்புறுப்பின் உட்பகுதியில் உராய்தல் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் பலவந்தமாக அவர் மீது பாலியல் குற்றம் புரியப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் தமது வைத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.


விசாரணைகளின் முடிவில் எதிரியைக் குற்றவாளியாகக் கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் எதிரிக்கு 15 வருடங்கள் கரூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் தண்டமாக அவர் 10 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டு என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
இவனுங்க எப்பதான் திருந்த போறானுங்களோ.

சுவிஸில் வியர்வையை வெளியேற்றும் புதிய ரோபோ ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது


சுவிட்சர்லாந்தில் வியர்வையை வெளியேற்றக் கூடிய புதிய வகை ரோபோ ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வகை ரோபோ வெப்பத்தை வெளியேற்றி மனிதனைப் போன்று நடக்கக் கூடியதெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆடை வகைகளை பரிசோதனை செய்வதற்காக இந்த வியர்க்கும் ரோபோ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

செட் கெலனைச் சேர்ந்த மார்க் ரிச்சர்ட்ஸ் என்ற விஞ்ஞானியே இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார்.

இந்த ரோபோ தொடர்பான மேலதிக ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Monday, July 13, 2009

சரிவிலிருந்து மீளும் நிலையில் உலகின் பொருளாதாரம்

உலக பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீள ஆரம்பித்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மீட்சி சீரற்றதாகவும் மந்த கதியிலும் அமையும் வாய்ப்புக்களே அதிகமுள்ளதாக இந்நிதியம் தெரிவிக்கின்றது.

உலகில் அதிகளவு வளர்ச்சி கண்ட நாடுகளைக் கொண்ட ஜி8 அமைப்பின் தலைவர்களிடையில் இத்தாலியில் விவாதங்கள் நடந்துவரும் நிலையில், நாணய நிதியத்தின் இந்த மதிப்பீடு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிதிச் சந்தைகளிலும் வங்கிகளிலும் இப்போதும் பிரச்சினைகள் இருந்துவரவே செய்வதாகவும், செல்வந்த நாடுகளின் பொருளாதாரங்கள் அடுத்த வருடத்தின் பிற்பகுதியில் தான் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப முடியும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளில் முன்பில்லாத வகையில் எடுக்கப்பட்ட பெரும் முயற்சிகள் உலகப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க உதவும் ஒரு காரணியாக அமைந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

Saturday, July 4, 2009


எட்டி பிடிக்கும் தூரத்தில்
என்னை ஏக்கத்தோடு
பார்க்கிறது ஒரு மல்லிகை
நானோ முட்கள் நிறைந்த
காட்டில் ஒரு ரோஜாவை
பறிக்க முயற்சித்து
கொண்டிருக்கிறேன்
உடலில் உதிரம் கசிய.
***

Wednesday, July 1, 2009

இன்னும் ஏன் மௌனம்




காதல் ஆசை இல்லாமல்
இருந்தேன் கண்ணே
உன்னை காணும் வரை

என் கவிதையே உன்னை
கண்டதும்தான் நான்
கண்கள் பெற்ற பயனையும்
அனுபவிக்கின்றேன்

நிச்சயமாய் ஆயிரம் பிறப்புகள்
வேண்டுமானாலும் எடுக்கிறேன்
உன்னோடு வாழ்வதற்கு

கோடி முறை கேட்டும்
உன் மௌனங்கள் மட்டுமே
பதில்களாய் எனக்கு

பின்னர் ஏன் பெண்களிடம்
நான் பேசும்போது மட்டும்
சிவந்து போகிறது
உன் கன்னங்கள்

களைத்துவிடு உன் மௌனத்தை
கண்கள் பேசும் காதல்
மொழியை உன் உதடுகள்
உச்சரிக்க ஆசைப்படுகிறேன்.


Tuesday, June 30, 2009

மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என்று கூறிய மணப்பெண்ணால் திருமணம் நின்றது




முகூர்த்த நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால் திருமணம் நின்றது. அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் வேறு வழியின்றி திரும்பி சென்றனர்.

சென்னை கே.கே.நகரை சேர்ந்த எம்காம் பட்டதாரி பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை திருமண வரவேற்பு நடந்தது.

மாலை 6 மணிக்கு மணமகன் மட்டும் மேடையில் இருந்தார். மணமகள், அலங்காரத்துக்கு சென்றவர் இரவு 7 மணிக்குதான் திரும்பியுள்ளார்.
பின்னர் மேடைக்கு வரும்போது திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் மணமகள் அறைக்கு அவரை அழைத்து சென்றனர். மணமகன் மட்டும் மேடையில் அமர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன்பின் இரவு 11 மணிக்கு, "எனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை" என்று மணமகள் கூறியுள்ளார். இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

உறவினர்களும் நண்பர்களும் மணமகளிடம் அதிகாலை 4 மணி வரை பேசி பார்த்தனர். ஆனால், திருமணத்துக்கு கடைசி வரை அவர் சம்மதிக்கவே இல்லை. அவருக்கு ஆதரவாக அம்மாவும் இருந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மணமகன் வீட்டார், அதிகாலை 4 மணிக்கு திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

மண்டபத்தில் அலங்கார வேலைப்பாடுகள், சாப்பாடு எல்லாம் தயாராக இருந்தன. தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. மேடையில் மணமகளின் பெயரை மட்டும் கிழித்துவிட்டு "தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது" என்று எழுதி வைத்து விட்டு மணமகன் வீட்டார் சென்றனர்.

மணமேடை வரை வந்து, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சாதாரண ஒரு காரணத்தை சொல்லி திருமணத்தை நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று மணமகன் வீட்டார் வேதனையுடன் கூறிவிட்டு சென்றனர். அவர்கள் போலீசில்கூட புகார் தெரிவிக்கவில்லை.

Tuesday, June 23, 2009

ஒரு தாயிடமிருந்து


அன்புள்ள மகனுக்கு
கலங்கிப்போன உன்
மனதுக்கு ஆறுதலாய்
அம்மாவின் அன்பு மடல்

குழந்தைகள் நடை
பயிலும்போது பல தடவைகள்
தடுக்கும் அதுபோலத்தான்
சாதிக்க துடிக்கும் போது
சறுக்கல்களை சந்திக்க
நேரிடும்

நீ கருவில் இருக்கும்
போது தவறியும் உன் கால்கள்
பட்டதில்லை இந்த தாயின்
வயிற்றில் அப்போது பயந்தேன்
ஆனால் கருவறையிலேயே
நீ கற்றுக்கொண்ட பாடம் அது
பெண்ணுக்கு பிரசவம்
மறு ஜென்மமாம் அந்த
பாக்கியம் எனக்கும்
கிடைத்தது உன்னால்

தாயென்ற அந்தஸ்து தந்த
தலைமகனே நிச்சயமாய்
எனக்கு தெரியும் நீ
சாதிக்கப் பிறந்தவன்

சோதனைகளை உன்
சாதனைகளின்
படிக்கட்டுகளாக்கு
உலகம் உன்னை நிமிர்ந்து
பார்க்கும்.
***

Monday, June 22, 2009

யாருக்காக..?


என் கவிதைகளின் கருவானவளே
இதோ என் இதயம் கிழிந்து
உதிரம் கசிகிறது

நீ விதைத்த காதல் விதை
வளர்ந்து விருட்சமாகி கொண்டிருக்கும்
போது அங்கம் அங்கமாக
அறுத்தெடுக்கிறாயே

உன் புதிய உறவின் புண்ணிறத்தால்
ஒவ்வொரு இரவும்
என் கண்ணீரால் ஈரமாவது
உனக்கெங்கே புரியப்போகிறது

நிரந்தரமாய் உறங்க நினைக்கிறேன்
காலனும் என்னைக்
கை விட்டு விட்டான்
காடு கூட எனை
வெறுக்கிறது போலும்

என் கவிதைக்கு முற்றுப்புள்ளி
வைத்து விட்டு இன்னொரு
கவிக்கு தலைப்பிட
சென்று விட்டாயா?


Thursday, June 18, 2009

இரவு மழை

நிலவு அழுகிறது தன்னை
விட உன்னை அழகாக படைத்து
பிரம்மன் தனக்கு வஞ்சனை
செய்துவிட்டான் என்று

*

நீ

இருவர் சேர்ந்து
இரவில் எழுதிய
கறுப்புக்கவிதை!

*

Wednesday, June 17, 2009

700 years old houses in Iran!

Very impressive. They also have electricity!
















பல நூற்றாண்டு காலம் மறைந்திருந்த அரிய அரை நிர்வாண மோனாலிஸா ஓவியம் - இத்தாலியில் கண்டுபிடிப்பு



உலகப் பிரபல ஓவியர் லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மேலாடையற்ற மோனாலிஸா ஓவியமானது பல நூறு வருடங்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எவரது பார்வையிலும் சிக்காது மறைவாக இருந்த இந்த அரிய ஓவியம், இத்தாலியிலுள்ள லியனார்டோ டாவின்சியின் பிறப்பிடமான வின்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழமையான மோனாலிஸாவின் ஓவியத்தையொத்த புன்னகை மற்றும் பின்னணிக் காட்சிகளுடன் காணப்படும் இந்த ஓவியம், நெப்போலியனின் மாமனார் கருதினால் ஜோசப் பெஸ்ச்சின் உடைமையாக இருந்து அவரது வாசிகசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

1503 ஆம் ஆண்டு லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மேற்படி ஓவியம், அசல் மோனாலிஸா ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட 6 நிர்வாண மோனாலிஸா ஓவியங்களில் ஒன்றென வின்சி அருங் காட்சியகத்தின் தலைவர் அலெக்ஸாண்ட்ரோ வெஸ்ஸோய் தெரிவித்தார்.

1479 ஆம் ஆண்டு பிறந்த லிஸா டெல் கியோகொன்டோ என்ற பெண்மணியின் உருவப்படமே இந்த மோனாலிஸா ஓவியம் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Friday, June 12, 2009

குழந்தைத் தொழிலாளிகள்














இவற்றை விமர்சிக்க என் தமிழில் வார்த்தைகள் இல்லை .