Monday, August 24, 2009

டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.

இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.

பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.

எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

Friday, August 21, 2009


கைப்பேசியும் காதலியும்
இல்லாத வாழ்க்கை
வெறுமையாய் போகும்.......
இரண்டும் இருப்பவன்
வாழ்க்கை
வெறுத்துப்போகும் .

Saturday, August 8, 2009



இலங்கேசன் காலத்தில்
நீ பிறந்திருந்தால்
எனக்குத்தான் எதிரியாகி
இருப்பான் சீதைக்கு
பதிலாய் உன்னை
சிறையெடுத்து.
*****

Wednesday, July 22, 2009

சொந்த மகளைக் பாலியல்வல்லுறவிற்குட்படுத்தியத்திய தந்தைக்கு 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை:வவுனியா மேல் நீதிமன்றம்

பதினாறு வயது நிரம்பாத தனது சொந்த மகளை
பாலியல்வல்லுறவிற்குட்படுத்தியத்திய குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினராக இருந்த இவருக்கு நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்துள்ளது.வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் முன்னிலையில் சட்டமா அதிபரினால் பதினாறு வயதுக்குக் குறைந்த தனது மகள் மீதான பாலியல்வல்லுறவு தொடர்பில் 3 குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


வழக்கு விசாரணையின்போது சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி தனது கணவன் சொந்த மகளைக் பாலியல் வல்லுறவு கொண்டதை நேரில் கண்டு பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து இந்த கற்பழிப்பு வழக்கு எதிரியாகிய செல்வராஜா சற்குணலிங்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது. தனது தந்தை தன்னை பல தடவைகள் தன்மீது பாலியல் குற்றம் புரிந்ததாகத் தெரிவித்தார். எதிரி மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளும் பாலியல்வல்லுறவு தொடர்பானதாகும்.


குற்றச் சம்பவம் நடைபெற்றதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வவுனியா வைத்திய அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பிறப்புறுப்பின் உட்பகுதியில் உராய்தல் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் பலவந்தமாக அவர் மீது பாலியல் குற்றம் புரியப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் தமது வைத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.


விசாரணைகளின் முடிவில் எதிரியைக் குற்றவாளியாகக் கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் எதிரிக்கு 15 வருடங்கள் கரூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் தண்டமாக அவர் 10 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டு என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
இவனுங்க எப்பதான் திருந்த போறானுங்களோ.

சுவிஸில் வியர்வையை வெளியேற்றும் புதிய ரோபோ ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது


சுவிட்சர்லாந்தில் வியர்வையை வெளியேற்றக் கூடிய புதிய வகை ரோபோ ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வகை ரோபோ வெப்பத்தை வெளியேற்றி மனிதனைப் போன்று நடக்கக் கூடியதெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆடை வகைகளை பரிசோதனை செய்வதற்காக இந்த வியர்க்கும் ரோபோ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

செட் கெலனைச் சேர்ந்த மார்க் ரிச்சர்ட்ஸ் என்ற விஞ்ஞானியே இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார்.

இந்த ரோபோ தொடர்பான மேலதிக ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Monday, July 13, 2009

சரிவிலிருந்து மீளும் நிலையில் உலகின் பொருளாதாரம்

உலக பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீள ஆரம்பித்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மீட்சி சீரற்றதாகவும் மந்த கதியிலும் அமையும் வாய்ப்புக்களே அதிகமுள்ளதாக இந்நிதியம் தெரிவிக்கின்றது.

உலகில் அதிகளவு வளர்ச்சி கண்ட நாடுகளைக் கொண்ட ஜி8 அமைப்பின் தலைவர்களிடையில் இத்தாலியில் விவாதங்கள் நடந்துவரும் நிலையில், நாணய நிதியத்தின் இந்த மதிப்பீடு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிதிச் சந்தைகளிலும் வங்கிகளிலும் இப்போதும் பிரச்சினைகள் இருந்துவரவே செய்வதாகவும், செல்வந்த நாடுகளின் பொருளாதாரங்கள் அடுத்த வருடத்தின் பிற்பகுதியில் தான் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப முடியும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளில் முன்பில்லாத வகையில் எடுக்கப்பட்ட பெரும் முயற்சிகள் உலகப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க உதவும் ஒரு காரணியாக அமைந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

Saturday, July 4, 2009


எட்டி பிடிக்கும் தூரத்தில்
என்னை ஏக்கத்தோடு
பார்க்கிறது ஒரு மல்லிகை
நானோ முட்கள் நிறைந்த
காட்டில் ஒரு ரோஜாவை
பறிக்க முயற்சித்து
கொண்டிருக்கிறேன்
உடலில் உதிரம் கசிய.
***

Wednesday, July 1, 2009

இன்னும் ஏன் மௌனம்




காதல் ஆசை இல்லாமல்
இருந்தேன் கண்ணே
உன்னை காணும் வரை

என் கவிதையே உன்னை
கண்டதும்தான் நான்
கண்கள் பெற்ற பயனையும்
அனுபவிக்கின்றேன்

நிச்சயமாய் ஆயிரம் பிறப்புகள்
வேண்டுமானாலும் எடுக்கிறேன்
உன்னோடு வாழ்வதற்கு

கோடி முறை கேட்டும்
உன் மௌனங்கள் மட்டுமே
பதில்களாய் எனக்கு

பின்னர் ஏன் பெண்களிடம்
நான் பேசும்போது மட்டும்
சிவந்து போகிறது
உன் கன்னங்கள்

களைத்துவிடு உன் மௌனத்தை
கண்கள் பேசும் காதல்
மொழியை உன் உதடுகள்
உச்சரிக்க ஆசைப்படுகிறேன்.


Tuesday, June 30, 2009

மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என்று கூறிய மணப்பெண்ணால் திருமணம் நின்றது




முகூர்த்த நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால் திருமணம் நின்றது. அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் வேறு வழியின்றி திரும்பி சென்றனர்.

சென்னை கே.கே.நகரை சேர்ந்த எம்காம் பட்டதாரி பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை திருமண வரவேற்பு நடந்தது.

மாலை 6 மணிக்கு மணமகன் மட்டும் மேடையில் இருந்தார். மணமகள், அலங்காரத்துக்கு சென்றவர் இரவு 7 மணிக்குதான் திரும்பியுள்ளார்.
பின்னர் மேடைக்கு வரும்போது திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் மணமகள் அறைக்கு அவரை அழைத்து சென்றனர். மணமகன் மட்டும் மேடையில் அமர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன்பின் இரவு 11 மணிக்கு, "எனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை" என்று மணமகள் கூறியுள்ளார். இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

உறவினர்களும் நண்பர்களும் மணமகளிடம் அதிகாலை 4 மணி வரை பேசி பார்த்தனர். ஆனால், திருமணத்துக்கு கடைசி வரை அவர் சம்மதிக்கவே இல்லை. அவருக்கு ஆதரவாக அம்மாவும் இருந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மணமகன் வீட்டார், அதிகாலை 4 மணிக்கு திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

மண்டபத்தில் அலங்கார வேலைப்பாடுகள், சாப்பாடு எல்லாம் தயாராக இருந்தன. தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. மேடையில் மணமகளின் பெயரை மட்டும் கிழித்துவிட்டு "தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது" என்று எழுதி வைத்து விட்டு மணமகன் வீட்டார் சென்றனர்.

மணமேடை வரை வந்து, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சாதாரண ஒரு காரணத்தை சொல்லி திருமணத்தை நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று மணமகன் வீட்டார் வேதனையுடன் கூறிவிட்டு சென்றனர். அவர்கள் போலீசில்கூட புகார் தெரிவிக்கவில்லை.

Tuesday, June 23, 2009

ஒரு தாயிடமிருந்து


அன்புள்ள மகனுக்கு
கலங்கிப்போன உன்
மனதுக்கு ஆறுதலாய்
அம்மாவின் அன்பு மடல்

குழந்தைகள் நடை
பயிலும்போது பல தடவைகள்
தடுக்கும் அதுபோலத்தான்
சாதிக்க துடிக்கும் போது
சறுக்கல்களை சந்திக்க
நேரிடும்

நீ கருவில் இருக்கும்
போது தவறியும் உன் கால்கள்
பட்டதில்லை இந்த தாயின்
வயிற்றில் அப்போது பயந்தேன்
ஆனால் கருவறையிலேயே
நீ கற்றுக்கொண்ட பாடம் அது
பெண்ணுக்கு பிரசவம்
மறு ஜென்மமாம் அந்த
பாக்கியம் எனக்கும்
கிடைத்தது உன்னால்

தாயென்ற அந்தஸ்து தந்த
தலைமகனே நிச்சயமாய்
எனக்கு தெரியும் நீ
சாதிக்கப் பிறந்தவன்

சோதனைகளை உன்
சாதனைகளின்
படிக்கட்டுகளாக்கு
உலகம் உன்னை நிமிர்ந்து
பார்க்கும்.
***

Monday, June 22, 2009

யாருக்காக..?


என் கவிதைகளின் கருவானவளே
இதோ என் இதயம் கிழிந்து
உதிரம் கசிகிறது

நீ விதைத்த காதல் விதை
வளர்ந்து விருட்சமாகி கொண்டிருக்கும்
போது அங்கம் அங்கமாக
அறுத்தெடுக்கிறாயே

உன் புதிய உறவின் புண்ணிறத்தால்
ஒவ்வொரு இரவும்
என் கண்ணீரால் ஈரமாவது
உனக்கெங்கே புரியப்போகிறது

நிரந்தரமாய் உறங்க நினைக்கிறேன்
காலனும் என்னைக்
கை விட்டு விட்டான்
காடு கூட எனை
வெறுக்கிறது போலும்

என் கவிதைக்கு முற்றுப்புள்ளி
வைத்து விட்டு இன்னொரு
கவிக்கு தலைப்பிட
சென்று விட்டாயா?


Thursday, June 18, 2009

இரவு மழை

நிலவு அழுகிறது தன்னை
விட உன்னை அழகாக படைத்து
பிரம்மன் தனக்கு வஞ்சனை
செய்துவிட்டான் என்று

*

நீ

இருவர் சேர்ந்து
இரவில் எழுதிய
கறுப்புக்கவிதை!

*

Wednesday, June 17, 2009

700 years old houses in Iran!

Very impressive. They also have electricity!
















பல நூற்றாண்டு காலம் மறைந்திருந்த அரிய அரை நிர்வாண மோனாலிஸா ஓவியம் - இத்தாலியில் கண்டுபிடிப்பு



உலகப் பிரபல ஓவியர் லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மேலாடையற்ற மோனாலிஸா ஓவியமானது பல நூறு வருடங்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எவரது பார்வையிலும் சிக்காது மறைவாக இருந்த இந்த அரிய ஓவியம், இத்தாலியிலுள்ள லியனார்டோ டாவின்சியின் பிறப்பிடமான வின்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழமையான மோனாலிஸாவின் ஓவியத்தையொத்த புன்னகை மற்றும் பின்னணிக் காட்சிகளுடன் காணப்படும் இந்த ஓவியம், நெப்போலியனின் மாமனார் கருதினால் ஜோசப் பெஸ்ச்சின் உடைமையாக இருந்து அவரது வாசிகசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

1503 ஆம் ஆண்டு லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மேற்படி ஓவியம், அசல் மோனாலிஸா ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட 6 நிர்வாண மோனாலிஸா ஓவியங்களில் ஒன்றென வின்சி அருங் காட்சியகத்தின் தலைவர் அலெக்ஸாண்ட்ரோ வெஸ்ஸோய் தெரிவித்தார்.

1479 ஆம் ஆண்டு பிறந்த லிஸா டெல் கியோகொன்டோ என்ற பெண்மணியின் உருவப்படமே இந்த மோனாலிஸா ஓவியம் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Friday, June 12, 2009

குழந்தைத் தொழிலாளிகள்














இவற்றை விமர்சிக்க என் தமிழில் வார்த்தைகள் இல்லை .













ரொட்டி பிரியர்களின் கவனத்திற்கு




இந்தியக்கொடியை எரிக்க முயன்றவர்களுக்கு நாள்தோறும் வீட்டின் முன்பு கொடியேற்றுமாறு தண்டனை


இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தி இந்தியக்கொடியை எரிக்கமுயன்றவர்கள் நாள்தோறும் தங்கள் வீட்டின் முன்பு கொடியேற்ற வேண்டுமென்று நீதிபதி தண்டனையளித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசிய பொதுவுடைமை கட்சி, தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய கொடிகளை தீ வைத்து எரிக்க முயன்றனர். இது தொடர்பாக தமிழரசன் உள்பட 8 பேரை கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எனவே, தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி இவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்து இருந்தனர். இந்த மனு விடுமுறை கால நீதிபதி கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது, தேசிய கொடியை மதிக்கிறேன். அக்கொடியை பெரிதும் நேசிக்கிறேன் என கடிதம் எழுதி தரும்படி அவர்களிடம் நீதிபதி கேட்டார். ஆனால் அவர்கள் தர வில்லை. இந்த நிலையில் இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், கொடியை எரிக்க முயன்றவர்கள் ஒரு மாதத்துக்கு தினமும் தங்கள் வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தர விட்டார்.

எப்போதோ படித்தது


டேய் மறந்துடாதே... பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை 'ரிஸீவ்' பண்ணவர்ற ஆள்கிட்ட 'அடையாளம்' சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.அதனால வழக்கம் போல் தண்ணியை போட்டுட்டு'கிழே படுத்துக்க' ஆமா!!!

ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க பஸ்ல காசுக் கொடுக்கலன்னா பஸ் ஓட்டச்சொல்வாங்களா?

காதல் ஒரு மழை மாதிரி,நனையும் போது சந்தோஷம். நனைந்த பின்பு ஜலதோஷம்.
வாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால'ரோடு' போட முடியாதே!

என்னதான் கராத்தேல பிளாக்பெல்ட்டுனாலும்தெருநாய் தொரத்தினா ஓடத்தான் செய்யணும்.

மரனம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும்ஆனால் பிரிவு என்பது ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்.