Wednesday, July 1, 2009

இன்னும் ஏன் மௌனம்




காதல் ஆசை இல்லாமல்
இருந்தேன் கண்ணே
உன்னை காணும் வரை

என் கவிதையே உன்னை
கண்டதும்தான் நான்
கண்கள் பெற்ற பயனையும்
அனுபவிக்கின்றேன்

நிச்சயமாய் ஆயிரம் பிறப்புகள்
வேண்டுமானாலும் எடுக்கிறேன்
உன்னோடு வாழ்வதற்கு

கோடி முறை கேட்டும்
உன் மௌனங்கள் மட்டுமே
பதில்களாய் எனக்கு

பின்னர் ஏன் பெண்களிடம்
நான் பேசும்போது மட்டும்
சிவந்து போகிறது
உன் கன்னங்கள்

களைத்துவிடு உன் மௌனத்தை
கண்கள் பேசும் காதல்
மொழியை உன் உதடுகள்
உச்சரிக்க ஆசைப்படுகிறேன்.