Saturday, June 6, 2009

எங்கே அவள்

குற்றவாளிகளை விடுவிக்க லஞ்சம் கேட்ட நீதிபதிகள்

பஞ்சாப் லஞ்ச ஒழிப்பு பொலிசார், நீதிபதிகள் யாராவது லஞ்சம் வாங்குகிறார்களா? என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீதிபதிகள் யார் யாருடன் டெலிபோனில் பேசுகின்றனர் என்பதை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பஞ்சாப் ஐகோர்ட்டில் நீதிபதிகள் இருவர் இடைத்தரகர்கள் மூலம் குற்றவாளிகளிடம் பேசி லஞ்சம் கேட்டது தெரியவந்தது.
கற்பழிப்பு வழக்கு
பஞ்சாப்பில் ஒரு பெண்ணை கற்பழித்ததாக ராம்லால் என்பவரும் ஐ எ எஸ் அதிகாரி ஜெயின் என்பவரு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நீதிபதி மேக்தாப்சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் தனது உறவினர் ஒருவர் மூலம் குற்றவாளிகளிடம் பேசினார். அவர்களை விடுவிக்க ரூ . 40 லட்சம் லஞ்சம் கேட்டார்.
அவர்கள் டெலிபோனில் பேசியதை லஞ்ச ஒழிப்பு பொலிசார் பதிவு செய்தனர். இதேபோல மேலும் சில நீதிபதிகளும் லஞ்சம் பேசிய ஆதாரங்கள் கிடைத்தன.
நடவடிக்கை இல்லை
நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் தலைமை நீதிபதி அனுமதி பெற வேண்டும். எனவே லஞ்ச ஒழிப்பு பொலிசார் டேப் ஆதாரங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஒரு நீதிபதியை மட்டும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.
இத்தனைக்கும் லஞ்ச ஒழிப்பு பொலிசார் ஆதாரத்தை கொடுத்து ஒரு வருடமாகிறது. ஆனாலும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நீதிபதிகள் லஞ்ச ஊழலில் சிக்கிய விபரங்களை வெளியே கசிய விட்டுள்ளனர்.




உண்மையான பக்தன் யார்?

பக்தர்கள் இருவர் பரந்தாமனை நினைத்து பக்தியுடன் நெஞ்சுருகி வேண்டிக் கொண்டிருந்தனர். ?
அவர்களில் யார் தங்களை முழுமையாக நம்புகிறவர்
சுவாமி? என்று பகவானிடம் கேட்டார் மகாலட்சுமி. ?
அவர்கள் இருவரின் வேண்டுதலைப் பார், உனக்கே எல்லாம் புரியும்!
என்று சொன்னார் மகாவிஷ்ணு.
முதல் பக்தன் வேண்டத் தொடங்கினான்.. ?கடவுளே.. எனக்கு வரும் வருமானத்தில் மாதத்தின் பாதிநாட்களை நான் எப்படியோ ஓட்டிவிடுகிறேன். எனவே மீதிப் பாதிநாட்களையும் நான் கஷ்டப்படாமல் ஓட்ட, நீதான் சாமி எனக்கு ஒரு வழி செய்ய வேண்டும்!?
இரண்டாவது பக்தன் தனது கோரிக்கையை வைத்தான்.. ?ஆண்டவா.. எனக்குக் கிடைப்பவை எல்லாமே உன்னருளால் கிடைப்பவைதான். பாதி நாட்களுக்கு எனக்கு படியளக்கும் நீ மீதிப் பாதிநாட்களுக்கும் படியளக்க மாட்டாயா என்ன? உனது அருள் எனக்குக் கிடைக்கும்வரை நான் காத்துக்கொண்டிருப்பேன்!

மகாலட்சுமிக்கு இப்போது புரிந்தது. கடவுளின் கருணையாலேயே எல்லாமும் நடப்பதாக நம்புபவன் எவனோ அவனே உண்மையான பக்தன். எனவே இரண்டாம் பக்தனே சிறந்த பக்தன் என்று தெரிந்து கொண்டார்.

யாரோ