Thursday, August 12, 2010


நேரம் இரவு ஒன்பது
மணி இடம் எனது
வீட்டு மொட்டை மாடி
வீட்டில் யாருமேயல்லாத
தைரியத்தில் ஒரு
சிகரட்டை
பற்றவைத்துக்கொண்டு
எதோ யோசனையில்
ஆழ்ந்திருக்கிறேன்

எதேட்சையாய் எதிவீட்டு
ஜன்னலுக்கு என்பார்வை
தாவ என்தேவதை முகம்
சிவந்துபோய் கோபமாய்
ஒரு பார்வை பார்த்துவிட்டு
விருட்டென்று போய்விட்டால்.

ஆகா இப்போதுதான்
புரிகிறது இவ்வளவு
நாளாய் எனக்குதெரியாமலே
அவளும் என்னை
காதலித்திருக்கிறாள்
இதோ இன்றோடு ஒரு
முடிவெடுத்துவிட்டேன்
இனி சிகரட்
பிடிப்பதில்லை என்
வீட்டு மொட்டைமாடியில்.