Tuesday, December 3, 2013

தங்க நகைகளை கடத்தி செல்ல முற்பட்ட பெண் கைது

இந்தியாவிற்கு சட்டவிரோதமாக தங்க நகைகளை கடத்தி செல்ல முற்பட்ட பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிசார் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைது செய்துள்ளனர்.


57 வயதுடைய குறித்த பெண் அவருடைய இடுப்பு பட்டியில் 350 கிராம் தங்கத்தை கடத்த முற்பட்டதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர.  
தங்க நகையின் பெறுமதி 7இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.