Monday, October 12, 2009

என் பள்ளிப்பருவ ஹீரோ

1982- 2000 என் வாழ்க்கையில் மறக்க முடியாத என் பள்ளிப்பருவம் அதிலும் என் எட்டாம் வகுப்பு வரை நாங்கள் படித்தது லக்கம் தனியார் தோட்டத்தில் ஒரு சிறிய பள்ளியில், அப்போது நான் கேள்வி பட்டிருக்கிறேன் அது வெள்ளையர்கள் காலத்தில் குதிரைகள் அடைத்து வைப்பதற்காக கட்டப்பட்டதாம் என் எட்டாம் வகுப்புவரை அங்குதான் படித்தேன்.

எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். வழியில் மழைக்கு ஒதுங்குவதட்கும் ஓர் இடம் கிடையாது, இப்போது அங்கு அந்த பள்ளி இல்லை வேறு ஒரு இடத்தில் மகா வித்தியலயமாகிவிட்டது.
ஆனாலும் நான் ஊருக்கு போனால் எப்படியாவது அங்கு போக மறப்பதில்லை காரணம் என் ஹீரோ அங்குதான் இருக்கிறார், ஆமாங்க.



இவர்தான் அந்த பள்ளிக்கூடத்திலிருந்து 300 மீட்டர் தூரத்தில் ஒரு சிறிய ஆற்றங்கரை தான் அய்யாவின் இருப்பிடம் காலையில் வரும்போதும் வீட்டுக்கு போகும்போதும் இவரை கடந்துதான் போகவேண்டும். பரீட்சை வந்தால் இவருக்கு ஒரே குஷிதான் சூடம், பத்தி,பால், பழம், தேங்காய் என அமர்களப்படுத்தி விடுவோம்.

மழை நேரத்தில் இவரை கடந்து போகும்போது வந்தால் தப்பித்தோம். ஆனால் மழை நின்றால்தான் இவருக்கு நிம்மதி கத்தி கூச்சல் போட்டு மனதுக்குள் அழுதுதே விடுவார். அப்படி பட்ட இவரை சத்தியமாய் அந்த ஊரை விட்டு வந்ததும் கொஞ்ச நாள் மறந்தே போனேன். ஆனால் விடுவாரா

அடிக்கடி அந்த பாதை தெருவோரம் உள்ள பாறைகள் என் கனவில் வரத்தொடங்கியது உண்மையா அவர் வரவே இல்லை. எதோ என் மனதுக்கு தோன்ற அடுத்த வாரமே புறப்பட்டு போனேன். அன்றிலிருந்து ஒவ்வொரு முறையும் ஊருக்கு போனால் அங்கு போகாமல் வருவதே இல்லை. அந்த ஊர் காரர்கள் எல்லோருமே சொல்வார்கள் அந்த ஊரில் படித்த மாணவர்களிலேயே நான் மட்டும்தான் இன்னும் மறக்காமல் இங்கு வந்து போகிறேன் என்று. அதான் இந்த முறை கையோடு கொண்டுபோன என் கேமராவில் அய்யாவை அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்.