Saturday, June 6, 2009

உண்மையான பக்தன் யார்?

பக்தர்கள் இருவர் பரந்தாமனை நினைத்து பக்தியுடன் நெஞ்சுருகி வேண்டிக் கொண்டிருந்தனர். ?
அவர்களில் யார் தங்களை முழுமையாக நம்புகிறவர்
சுவாமி? என்று பகவானிடம் கேட்டார் மகாலட்சுமி. ?
அவர்கள் இருவரின் வேண்டுதலைப் பார், உனக்கே எல்லாம் புரியும்!
என்று சொன்னார் மகாவிஷ்ணு.
முதல் பக்தன் வேண்டத் தொடங்கினான்.. ?கடவுளே.. எனக்கு வரும் வருமானத்தில் மாதத்தின் பாதிநாட்களை நான் எப்படியோ ஓட்டிவிடுகிறேன். எனவே மீதிப் பாதிநாட்களையும் நான் கஷ்டப்படாமல் ஓட்ட, நீதான் சாமி எனக்கு ஒரு வழி செய்ய வேண்டும்!?
இரண்டாவது பக்தன் தனது கோரிக்கையை வைத்தான்.. ?ஆண்டவா.. எனக்குக் கிடைப்பவை எல்லாமே உன்னருளால் கிடைப்பவைதான். பாதி நாட்களுக்கு எனக்கு படியளக்கும் நீ மீதிப் பாதிநாட்களுக்கும் படியளக்க மாட்டாயா என்ன? உனது அருள் எனக்குக் கிடைக்கும்வரை நான் காத்துக்கொண்டிருப்பேன்!

மகாலட்சுமிக்கு இப்போது புரிந்தது. கடவுளின் கருணையாலேயே எல்லாமும் நடப்பதாக நம்புபவன் எவனோ அவனே உண்மையான பக்தன். எனவே இரண்டாம் பக்தனே சிறந்த பக்தன் என்று தெரிந்து கொண்டார்.

யாரோ

1 comment:

Anonymous said...

God is not just a giver of JUST Material blessing..

Post a Comment