Friday, June 5, 2009

எனது காவியம்







நம் புதிய வாழ்கையை ஆரம்பிக்க உன்
மண்ணுக்கு புறப்படும் முன்
இறுதி ஊர்வலத்துக்கு தயாராகிவிட்ட
என் இனியவளுக்கு.


என்னை விட காலன் உன்மேல் அதிக
காதல் வைத்துவிட்டான்போலும்
அதனால்தான் அவசரமாய்
அணைத்துக்கொண்டான்.


உன் சுக துக்கங்களில் பங்கேடுத்துக்கொல்லத்தான்
உன்னை காதலித்தேன் இன்று
துக்கத்தை மட்டும் முழுமையாக எனக்கு
தந்துவிட்டு போய்விட்டாயே.


ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு பறந்து
வந்தேன் கனவுகளே இல்லாத
உலகுக்கு நீ
செல்லப்போகிறாய் என்று அரியாமல்.


என்னவளே நீ இன்னும் என்னுள்
வாழ்கிறாய் என்னால்
உன் இறுதிப்பயணத்தை
ஜீரணிக்க முடியாது.


நிச்சயமாய் இவ்வுலகில் நீ மீண்டும் பிறக்கமாட்டாய்
இதயத்தில் ஈரமில்லாத
மனித ஜடங்களோடு உன்னால் ஜீவிக்க
முடியாது என்று எனக்கு தெரியும் .


இதோ கடந்து போன எம்
பசுமையான நினைவுகளோடு
வாழப்போகிறேன் நம் காதலையும்
காவியமாய் காலம் சொல்ல.

No comments:

Post a Comment