Friday, June 12, 2009

இந்தியக்கொடியை எரிக்க முயன்றவர்களுக்கு நாள்தோறும் வீட்டின் முன்பு கொடியேற்றுமாறு தண்டனை


இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தி இந்தியக்கொடியை எரிக்கமுயன்றவர்கள் நாள்தோறும் தங்கள் வீட்டின் முன்பு கொடியேற்ற வேண்டுமென்று நீதிபதி தண்டனையளித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசிய பொதுவுடைமை கட்சி, தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய கொடிகளை தீ வைத்து எரிக்க முயன்றனர். இது தொடர்பாக தமிழரசன் உள்பட 8 பேரை கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எனவே, தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி இவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்து இருந்தனர். இந்த மனு விடுமுறை கால நீதிபதி கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது, தேசிய கொடியை மதிக்கிறேன். அக்கொடியை பெரிதும் நேசிக்கிறேன் என கடிதம் எழுதி தரும்படி அவர்களிடம் நீதிபதி கேட்டார். ஆனால் அவர்கள் தர வில்லை. இந்த நிலையில் இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், கொடியை எரிக்க முயன்றவர்கள் ஒரு மாதத்துக்கு தினமும் தங்கள் வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தர விட்டார்.

No comments:

Post a Comment