Wednesday, October 21, 2009

தரிசனம்


தினமும் அவள் வீட்டை
கடக்கும்போது தானாகவே
என் கால்கள் வேகத்தை
குறைத்துக்கொள்ளும்
அவள் வீட்டு வாசலை
பார்த்த படியே நடந்து
செல்வேன் என்
தேவதையின் தரிசனத்துக்காக

எத்தனையோ முறை
முயற்சித்தும் என்
காதுகளுக்கு மட்டும் அவள்
காந்தக்குரலை
கேட்கும் பாக்கியம்
கிட்டவே இல்லை

திடீரென அவள் வீடு
பூட்டிக்கிடந்தது ஒரு நாள்
இரண்டு, மூன்று, பதினெட்டு
மாதங்கள் அவள் தரிசனம்
இன்றி ஏங்கினேன்

என் வீட்டு வாடகை
முடிந்து வேறு வீட்டுக்கு
மாறி விட்டேன் முதல் நாளே
மொட்டை மாடியில்
நான்..........
கால்கள் நழுவி அந்தரத்தில்
நிற்பதுபோல் ஓர் உணர்வு
ஓ நான் காண்பது கனவா
எதிர்வீட்டு மாடியில்
என் தேவதை

இப்போதேல்லாம் நான்
நினைத்தது போலவே
இரண்டு முறையாவது
எனக்கு தரிசனம் தந்து
விடுவாள் என் தேவதை
தன் இரண்டு மாத
கைக்குழந்தையோடு...

No comments:

Post a Comment