Monday, June 22, 2009

யாருக்காக..?


என் கவிதைகளின் கருவானவளே
இதோ என் இதயம் கிழிந்து
உதிரம் கசிகிறது

நீ விதைத்த காதல் விதை
வளர்ந்து விருட்சமாகி கொண்டிருக்கும்
போது அங்கம் அங்கமாக
அறுத்தெடுக்கிறாயே

உன் புதிய உறவின் புண்ணிறத்தால்
ஒவ்வொரு இரவும்
என் கண்ணீரால் ஈரமாவது
உனக்கெங்கே புரியப்போகிறது

நிரந்தரமாய் உறங்க நினைக்கிறேன்
காலனும் என்னைக்
கை விட்டு விட்டான்
காடு கூட எனை
வெறுக்கிறது போலும்

என் கவிதைக்கு முற்றுப்புள்ளி
வைத்து விட்டு இன்னொரு
கவிக்கு தலைப்பிட
சென்று விட்டாயா?


No comments:

Post a Comment